30 நாய்களை விஷம் வைத்துக் கொன்றவருக்கு அபராதம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தனது ஆட்டை கடித்துக் கொன்ற 30 நாய்களை அதே ஆட்டின் கறியில் விஷத்தைத் தடவி வைத்து கொன்றவருக்கு ஊர்ப் பஞ்சாயத்தில் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை மாட்டம் மூங்கிலடி கிராமதைத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்டுப் பண்ணை வைத்துள்ளார். சமீபத்தில் அவரது ஆடு ஒன்றை அந்த ஊரைச் சேர்ந்த நாய்கள் கடித்துக் கொன்று விட்டன.

இதனால் ஆத்திரமடைந்த அவர் நாய்களைப் பழிவாங்க முடிவு செய்தார். இதையடுத்து நாய்கள் கடித்ததால் இறந்த ஆட்டை பல துண்டுகளாக வெட்டினார். பின்னர், அவற்றின் கறியில், விஷத்தைத் தடவினார். பிறகு ஊரின் பல பகுதிகளிலும் ஆட்டு மாமிசத் துண்டுகளைப் போட்டார்.

இவற்றை கிட்டத்தட்ட 30 நாய்கள் சாப்பிட்டன. சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அத்தனை நாய்களும் இறந்து போயின. இதனால் ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஊர்ப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. தவறு செய்த ஆட்டுப் பண்ணையாளருக்கு பஞ்சாயத்தில் ரூ.20,000 தண்டம் (அபராதம்) விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அபராதத்தைக் கட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+