ஓகேனக்கல்-ஜப்பான் மேலும் ரூ.308 கோடி நிதி

முதல் கட்டப் பணிகளுக்கு ரூ. 1,334 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஜப்பானிய வங்கி ரூ. 857 கோடி வழங்க முன் வந்தது. இதையடுத்து திட்டம் ஒரு வழியாக உருப்பெற்றது.
இந் நிலையில் கர்நாடகத்தி்ன் ரூபத்தில் திட்டத்துக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. அம் மாநில தேர்தலில் பாஜக இந்த திட்டத்துக்கு எதிராக பிரச்சாரத்தில் இறங்கியதால், காங்கிரசுக்கு உதவும் வகையில் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால், தேர்தல் முடிந்த பின் திட்டத்தை விரைவுபடுத்த உத்தரவிட்டார். இந் நிலையில் ஓகேனக்கல் திட்டப் பணிகள் வேகம் பிடித்துள்ளன.
இந் நிலையில் 2வது கட்டதுக்கான நிதியுதவி பெறுவது குறித்து டெல்லியில் ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் மத்திய-மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் 2வது கட்ட திட்டப் பணிகளுக்காக ரூ. 308 கோடி அளிக்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது.
2வது கட்ட திட்டம் மூலம் ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காவிரி நீர் வழங்கப்படும்.
2012ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தை நிறைவேற்ற தமிழகம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications