எல்டிடிஇ ஆதரவாளரின் வங்கிக் கணக்குகளை ஆராயும் சிபிஐ!

Subscribe to Oneindia Tamil

LTTE flag
பெர்லின்: விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்யும் குமரன் பத்மநாபன் என்பவருடைய வங்கிக் கணக்குகள் குறித்த விவரத்தை அறிய சிபிஐ குழு ஜெர்மனியில் முகாமிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் ஓடி விட்டது. இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்ட சிபிஐ தற்போது ராஜீவ் கொலை தொடர்பான விசாரணையை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்யும் குமரன் பத்மநாபன் என்பவருக்கு ஜெர்மனி வங்கிகளில் கணக்கு உள்ளது. அதுகுறித்த விவரங்களை அறிய தற்போது சிபிஐ குழு ஒன்று ஜெர்மனியில் முகாமிட்டுள்ளது.

கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படுபவர் குமரன் பத்நாபன். இவருடைய பண விநியோகம் குறித்து சிபிஐக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவேதான் இவருடைய வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை ஜெர்மனி அதிகாரிகளிடம் சிபிஐ கோரியுள்ளது.

இதேபோல சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் இதுதொடர்பாக சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில் சிபிஐ குழு பெர்லின் பயணம் மேற்கொண்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான சில முக்கிய விவரங்கள் தொடர்பாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐயின் இந்தப் புதிய விசாரணை மூலம் ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் சிபிஐ கையில் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+