மத்தியில் ஆட்சி: பாஜக 'மனக்கோட்டை'-வாசன்!
மதுரை: ஒரு சில மாநிலங்களில் பாஜக ஆட்சி வந்ததும், மத்தியிலும் ஆட்சிக்கு வந்து விடலாம் என அந்தக் கட்சி 'மனகோட்டை' கட்டி வருகிறது என மத்திய இணையமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டும் என்று ஒரு போதும் காங்கிரஸ் அரசு நினைத்து இல்லை. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார். இதனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டு விட்டது.
மத்திய அமைச்சர்கள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில மாநிலங்களில் பாஜக ஆட்சி வந்ததும், மத்தியிலும் ஆட்சிக்கு வந்து விடலாம் என மனகோட்டை கட்டி வருகிறது. ஆனால் அவர்களது கனவு பலிக்கப் போவதில்லை.
மக்களவைத் தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சியே நீடிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications