என்எல்சி ஸ்டிரைக் தீவிரம்-மின் வினியோகம் பாதிக்கும்
நெய்வேலி: என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்துள்ளது. நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் பெருமளவில் மின்தடை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
என்.எல்.சியில் வேலை பார்த்து வரும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும்
களத்தில் இறங்கியுள்ளன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் என்.எல்.சி. மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறையத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம், மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இருப்பு குறையத் தொடங்கியுள்ளதே. நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் பெரும்பாலும் ஒப்பந்த ஊழியர்கள்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஸ்டிரைக் காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இருப்பும் குறையத் தொடங்கியுள்ளதால், தற்போது 880 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தினசரி 3 மின் நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். தற்போது அதில் 880 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது.
ஸ்டிரைக் தவிர முதல் மின் நிலையத்திற்கு பழுப்பு நிலக்கரியை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அரை கிலோமீட்டர் அளவுக்கு அறுந்து விட்டது.
அதேபோல 2வது அனல் மின் நிலையத்தில் மின்சார கேபிள் தீப்பிடித்து எரிந்து விட்டது. இதனால் இருமின் நிலையங்களிலும் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
ஸ்டிரைக் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அடுத்தகட்டமாக சிறை நிரப்பும் போராட்டத்தை ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர். எனவே மின் உற்பத்தி மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது. அப்படிக் குறைந்தால் அது தென் மாவட்டங்களுக்கான மின் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மத்திய அரசு தலையிடுகிறது:
இந் நிலையில் என்.எல்.சி. நிறுவன ஒப்பந்த ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் டெல்லிக்கு அழைத்துப் பேச மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சந்தோஷ் பொகார்டியா ஏற்பாடு செய்துள்ளார்.
ஜூன் 13ம் தேதி டெல்லியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு என்.எல்.சி.நிறுவன அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் வேண்டுகோளின் பேரில் இந்த கூட்டத்திற்கு பொகார்டியா ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயலுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications