காரைக்குடி-தூத்துக்குடி ரயில் பாதை: ப.சி கோரிக்கை, லாலு ஏற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மற்றும் தமிழக அமைச்சர் சுப.தங்கவேலன் ஆகியோரது வேண்டுகோளின்படி காரைக்குடி-தூத்துக்குடி இடையே ராமநாதபுரம் வழியாக புதிய ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன்.
இதற்கு லாலு ஒப்புதல் அளித்துவிட்டார். மேலும் இந்த ஆய்வுப் பணிக்கான டெண்டர் விடவும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, வரும் ஜூலையில் இந்த ஆய்வுப் பணிகள் துவங்கும். அந்த முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications