பெட்ரோல் விலை உயர்வுக்கு 'நன்றி'!-கழுதைகளுக்கு சால்வை!!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, கழுதைகளுக்கு சால்வை அணிவித்து மதிமுகவினர் நூதன போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வக்கீல் ஜோயல் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது விறகு அடுப்பு கொண்டு சமையல் செய்வது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வுக்கு பிரதமர், முதல்வர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோர் தான் காரணம். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, கூறி நான்கு கழுதைகள் கொண்டு வந்து ஒவ்வொரு பெயராக அறிவித்து அந்த கழுதைகளுக்கு சல்வை அணிவித்தனர். இந்த சம்பவத்தை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications