கும்மிடிப்பூண்டி: புதைத்து வைக்கப்பட்ட ராக்கெட் குண்டுகள்-2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் நடத்திய சோதனையில் ஒரு நிறுவனத்தின் குடவுனில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
சென்னையை அருகே கும்மிடிப்பூண்டியில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி தோட்டாக்களை மாணவர்கள் விளையாட்டாக எரித்தபோது அவை வெடித்ததில் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்த தோட்டாக்கள் அங்கு எப்படி வந்தன என்ற விசராணை நடந்தபோது சிப்காட் தொழிற்பேட்டை அருகே கிணற்றில் மூட்டை மூட்டையாக துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கின.
இதையடுத்து தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அந்த தோட்டாக்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பழமையான தோட்டாக்கள் என்று தெரியவந்துள்ளது.
தொழிற்பேட்டையில் உள்ள ஏதாவது ஒரு பழைய இரும்பு நிறுவனம் அதை உருக்க இறக்குமதி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பழைய இரும்பு சாதனங்களை இறக்குமதி செய்யும்போது அவற்றுடன் சேர்ந்து இந்த தோட்டாக்கள் வந்திருக்கலாம், போலீசாருக்கு பயந்து இதை அவர்கள் வெளியில் கொட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் 16 இரும்பு நிறுவனங்களில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது விநாயகா அலாய்ஸ் ஸ்டீல் என்ற நிறுவனம் இதை இறக்குமதி செய்தது தெரிய வந்தது. மேலும் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தான் போலீசுக்கு பயந்து தோட்டாக்களை கிணற்றில் போட்டனர் என்பதும் உறுதியானது.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் மேலும் சோதனைகள் நடந்தபோது குவியல் குவியலாக கையெறி குண்டுகள், ஏ.கே.47 துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணிவெடிகள் ஆகியவையும் இருந்தன.
மேலும் அந்த நிறுவனத்தின் குடவுனில் தோண்டிப் பார்த்தபோது ஏராளமாக குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. இவை மிகப் பழமையான குண்டுகளாகும், பெரும்பாலானவற்றில் அமெரிக்க முத்திரை உள்ளது.
இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்துவரும் இந்த நிறுவனத்தி்ன் அதிபர் அசோக்குமார் ஜெயின் (45), பொது மேலாளர் மனோஜ்குமார் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த குண்டுகளை கொதிகலனில் போட்டு உருக்கினால் வெடித்துச் சிதறிவிடும் என்பதால், வெடிமருந்தை நீக்கிவிட்டு பின்னர் உருக்கவும், அதுவரை வெளியாரின் கண்களில் படாமல் இருக்கவும் புதைத்து வைத்ததாக இந்த இருவரும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட எஸ்பி செந்தாமரைக்கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,
இரும்பு உருக்கு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் இரும்பு ஸ்கிராப்புடன் சில நேரம் வெடிபொருட்களும் வருவதுண்டு. அப்படி வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு பதுக்கி, புதைத்து வைத்தாலோ, வெளியே வீசினாலோ அது சட்டப்படி குற்றம் என்றார்.
தீவிரவாத தொடர்பு இல்லை-டிஜிபி:
இந் நிலையில் டிஜிபி ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கும்மிடிப்பூண்டி இருகே சிப்காட் வளாகத்தில் பயன்படுத்தாத ஒரு கிணற்றில் துருப்பிடித்த நிலையில், பழைய பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. தீவிரவாத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பற்றியும் சில தரப்பில் இருந்து (ஜெயலலிதா) குறை கூறப்படுகிறது. இது உண்மைக்குப் புறம்பானது.
கைப்பற்றப்பட்ட பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள், செல்கள், கையெறி குண்டுகள் மிகவும் பழையானவை (1917 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் தயாரானவை) என்பதும், அவை இந்தியாவில் தயாரானவை அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து இரும்பு கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி கம்பிகளாக மாற்றி விற்பனை செய்து வரும் 14 ஸ்டீல் கம்பெனிகள் சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகின்றன. இவற்றுள் ஒரு நிறுவனத்துக்கு வந்த கழிவுப் பொருட்களுடன் இந்த துருபிடித்த தோட்டாக்கள் வந்துள்ளதாகவும், அவற்றை கொதிகலனில் பயன்படுத்த முடியாதென்பதால், அந்த நிறுவனத்தினர் அவற்றை கிணற்றுக்குள் போட்டுள்ளனர்.
இது தொடர்பாக விநாயகா அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவன உரிமையாளர் அசோக்குமார் ஜெயின், மேலாளர் மனோஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்படுகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த அவை எதுவும் தற்போது பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல. எனவே இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளை தொடர்புபடுத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications