நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 850 ஆக உயர்வு
டெல்லி: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 850 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தற்போது கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. ஆனால் நெல்லுக்கு மட்டும் குவிண்டாலுக்கு ரூ. 745 வழங்கப்பட்டு வருகிறது.
இது பாரபட்சமானது, நெல்லுக்கும் ரூ.1000 குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் நெல் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.850 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பின்னர் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார.