விடுதலைப் புலிகள் தாக்குதலில் 19 ராணுவத்தினர் பலி
வவுனியா: இலங்கையில் நடந்த கடும் சண்டையில் 19 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இலங்கையில், ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு மன்னார் கடல் பகுதியில் உள்ள இலங்கை கடற்படை முகாமை விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் பிரிவினர் அதிரடியாக தாக்கி அழித்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் வவுனியா மாவட்டம் குஞ்சுக்குளம் என்ற பகுதியில் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதலை தொடுத்தனர். பல மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ராணுவத் தரப்பில் 19 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விடுதலைப் புலிகளின் தாக்குதல் கடுமையாக இருந்ததால்,ராணுவம் பின் வாங்கியதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications