உருவாகிறது அதிநவீன சட்டசபை கட்டடம்
அரசினர் தோட்டத்தி்ல் இருந்த சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம், பழைய எம்எல்ஏ ஹாஸ்டலின் ஒரு பகுதி, அரசு அச்சகம் உள்பட பல கட்டடங்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ரூ.200 கோடி செலவில் 1.6 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் கட்டப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகத்தைக் கட்ட உலக அளவிலான டெண்டர் கோரப்பட்டு ஜெர்மனியை சேர்ந்த ஜி.எம்.பி. கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎம்பியின் முன்னணி டிசைனர்களான கேத்ரீனா புரோசே, கிரிஸ்டென் ஓட்டே, ஹெல்ஜே லெசூயிஸ், ஜூலியான் ஆகியோர் இந்த கட்டடத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த நிறுவனம் 2010ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இதை கட்டி முடிக்கும்.
நவீனமும் திராவிட கட்டிடக் கலையும் இணைந்ததாக இந்த கட்டடம் வடிமைக்கப்பட்டுள்ளது. ராட்டை வடிவில் இந்தக் கட்டடம் அமையும்.
வள்ளுவர் கோட்டம் போல...
இதற்கிடையே ஜெர்மன் நிறுவனம் தந்துள்ள டிசைனில் சில மாற்றங்களை செய்யுமாறு முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.
கட்டிடத்தின் முகப்பை வள்ளுவர் கோட்ட தேர் போன்று வடிவமைக்குமாறு கூறியுள்ளார். இதனால் டிசைன் மாற்றப்படவுள்ளது.













Click it and Unblock the Notifications