12வது நாளில் 2வது திருமணம்-கணவன் மீது பெண் புகார்
சேலம்: காதல் திருமணம் நடந்த 12 நாட்களில் மனைவியை கழற்றிவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணை மணக்க முயன்ற கணவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் தாமரை செல்வி (18). இவருக்கும் திருமலைகிரியை சேர்ந்த சாமிதுரைக்கும் (21) மூன்று மாதங்களுக்கு முன் காதல் மலர்ந்தது.
இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 1ம் தேதி வீட்டை ஓடி போளூர் விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
வலசையூர் அருகில் குடும்பம் நடத்தி வந்தனர். இந் நிலையில் சாமிதுரை, தாமரை செல்வியை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று பாட்டி வீட்டில் தங்க வைத்தார்.
பிறகு வந்து அழைத்துச் செல்வதாக கூறி சென்றவர் திரும்பி வரவில்லை. இந் நிலையில் சாமிதுரைக்கு வேறு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளில் அவரது வீட்டார் ஈடுபட்டனர்.
சாமிதுரைக்கும், அவரது உறவினர் வீட்டு பெண்ணுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இதையறிந்த தாமரைசெல்வி சேலம் டிஐஜியிடம் நேரில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு சாமிதுரையிடம் விசாரணை நடத்தினர். மேலும் இன்று காலை நடக்க இருந்த இரண்டாவது திருமணமும் நிறுத்தப்பட்டது.
தாமரை செல்விக்கும், சாமிதுரைக்கும் திருமணம் நடந்து 12 நாட்களே ஆகிறது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications