For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'குடிநீ்ர் தந்தோம்.. இவர்கள் சாராயம் தருகிறார்கள்'

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: கருணாநிதியின் கட்டுபாட்டில் கட்சிகாரர்கள் இல்லை. கடலூர் திமுக மகளிரணி மாநாட்டிற்கு கூட்டம் இல்லாததால் பெண் போலீசாரை சாதாரண உடையில் வரச் சொல்லியுள்ளனர் முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

மேலப்பாளையம் பஜார் திடலில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

புரட்சித் தலைவி அம்மாவுடைய ஆட்சி அமையப் போவதாக திமுகவினரே சொல்கின்றனர். அம்மா ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் ரூ. 5,000 கோடி மதிப்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கினோம்.

இப்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் வழங்குகிறார்கள். அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுகின்றனர். மக்கள் வரிப் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

கருணாநிதியின் கட்டுபாட்டில் கட்சிகாரர்கள் இல்லை. கடலூர் திமுக மகளிரணி மாநாட்டிற்கு கூட்டம் இல்லாததால் பெண் போலீசாரை சாதாரண உடையில் வரச் சொல்லியுள்ளனர்.

பஸ்களில் போன கம்யூனிட்டுகாரர்கள் இப்போது சொகுசு கார்களில் வலம் வருகின்றனர். திருநாவுகரசு போன்ற பாஜகவினர் கருணாநிதியை ரகசியமாக சந்திக்கின்றனர்.

திமுக கூட்டணி உடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை கட்சி கூட்டணி அமைத்தாலும் திமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்றார் நயினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X