என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.750 ஊதி உயர்வு
டெல்லி: டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.750 சம்பள உயர்வு அளிக்க நெய்வேலி அனல் மின் நிலைய நிர்வாகம் ஒப்புக் கொண்டது. தொழிலாளர்களின் முக்கியமான கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல், சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவ வசதி, போனஸ் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மறியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 13 நாட்களாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
இதையடுத்து மத்திய அரசு, தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முன்வந்தது. இந்தப் பேச்சு வாத்தை நேற்று டெல்லியில் நடந்தது. மத்திய நிலக்கரித்துறை மந்திரி சந்தோஷ் பகோர்டியா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் என்.எல்.சி. நிர்வாகம், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதலில் இருதரப்பினருடனும் தனித் தனியாக அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருதரப்பையும் ஒன்றாக அமர வைத்துப் பேசினார்.
என்.எல்.சி. சார்பில் செயல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிரசன்ன குமார், பணியாளர் துறை இயக்குனர் பாபுராவ், நிலக்கரித்துறை அமைச்சக செயலாளர் ஹரிஷ் சந்திர குப்தா, தொழிற்சங்கத்தினர் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, எம்.பி.சுப்புராயன், மகாதேவன், ஜீவா தொழிற் சங்க பொதுச் செயலாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிற்பகலில், தி.மு.க. தொழிற் சங்கம் சார்பில் குப்புசாமி எம்.பி., சி.ஐ.டி.யூ. சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன், பா.ம.க. தொழிற்சங்கம் சார்பில் பொன்னுசாமி எம்.பி., உள்ளிட்டோர் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிர்வாகத்தினர், மத்திய இணை மந்திரி சந்தோஷ் பகோர்டியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்வைத்த 9 அம்ச கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை என்.எல்.சி. நிர்வாகம் ஏற்றுக்கொள்வதாக ஒப்புக் கொண்டது.
அதன்படி, பணி நிரந்தரம் கோரும் ஒப்பந்த தொழிலாளர்கள் இனி தொழிற்சாலை சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
1995-ம் ஆண்டு தொழிற்சாலை கூட்டுறவு சங்கத்தில் முதல் கட்டமாக 1,000 ஒப்பந்த தொழிலாளர்கள் உறுப்பினர்களாக ஆக்கப்பட்டனர். அவர்களில் 250 பேர் பணி மூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யப்பட்டனர். பின்னர் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது பேச்சு வார்த்தையின்போது, இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும், முதல் கட்டமாக 5,000 ஒப்பந்த தொழிலாளர்களை பணி மூப்பு அடிப்படையில் உறுப்பினர்களாக சேர்க்கவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும், வருடந்தோறும் பணியில் இருந்து நிரந்தர தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது காலியாகும் இடங்களில், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.
நெய்வேலியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நிரந்த தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதி ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும்.
இதேபோல், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ரூ.750 சம்பள உயர்வு அளிக்கப்படும்.
இதையடுத்து, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொகோர்டியா கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் குறித்து ஜீவா தொழிற்சங்க பொதுச் செயலாளர் சேகர் கூறுகையில், வாய்மொழியாக நிர்வாகம் அளித்துள்ள உறுதிமொழிகளை சட்டப்பூர்வ ஒப்பந்தமாக்கி நிறைவேற்றுவது குறித்து வருகிற 16ம் தேதி மத்திய தலைமைத் தொழிலாளர் நலத்துறை ஆணையர் மொஹோபாத்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். சட்டப்பூர்வமாக, ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்வரை ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என்றார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications