For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுமக்கள் அதிருப்தி: ஹோட்டல் 'மீல்ஸ்' அளவு அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளதன் எதிரொலியாக ஹோட்டல்களில் வழங்கப்படும் அளவுச் சாப்பாட்டின் அளவு அதிகரிக்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தமிழக ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களின் விலை குறைக்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

அதன்படி அனைத்து சாப்பாடுகளின் விலையும் ஓரளவு குறைக்கப்பட்டது. ஆனால் ரூ. 30க்கு வழங்கப்படும் அளவுச் சாப்பாட்டின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. மேலும் ஊறுகாய் கூட வைக்கவில்ைல என்று பொதுமக்கள் குமுறல் வெளியிட்டனர்.

விலை குறைப்பு என்ற ெபயரில் திருப்தி இல்லாத அளவுக்கு சாப்பாடு தருவதாக பொதுமக்கள் பெருமம் அதிருப்தி அடைந்தன்.

இதையடுத்து தற்போது அளவுச் சாப்பாட்டில் வழங்கப்படும் சாதத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் தலைவர் வசந்த பவன் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவின் தரம், சுவை, அளவு குறையவில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், அளவுச் சாப்பாட்டில் சாதத்தின் அளவை சற்று அதிகரித்தால் மேலும் பயனடைவோம் என்ற கருத்தினை பத்திரிக்கையாளர்கள் உள்பட பலர் கேட்டுக் கொண்டனர்.

அதன் படி, உணவு அமைச்சர்கேட்டுக் கொண்டதின் பேரில், ஞாயிற்றுக்கிழமை முதல் அளவுச்சாப்பாட்டில் சாதத்தின் அளவை அதிகரித்து 300 கிராம் வழங்கப்படும் என சங்கம் தீர்மானித்துள்ளது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X