For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னியாகுமரியில் திடீர் கடல் கொந்தளிப்பு

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் திடீர் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவ காற்று கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருப்பது வழக்கம்.

கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேற்கு கடற்கரை பகுதியில் நாளை (15ம்) தேதி முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் ராஜாக்கமங்கலம் துறை பகுதியில் கடல் சீற்றம் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. ராட்சாத அலைகள் எழுந்து வீழ்வதாலும் கரை பகுதிகள் இடிந்து மணல் கடலுக்குள் கரைந்து வருவதாலும் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவது குறித்து அச்சமடைந்துள்ளனர்.

இதனால் பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.

கடல் அரிப்பை தடுக்க போடப்பட்டுள்ள தடுப்பு சுவர் கற்களும் ராட்சாத அலைகளால் இழுத்து செல்லப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X