ரயிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ரயிலிருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.
சென்னை-கும்பகோணம் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஆலம்பட்டியைச் சேர்ந்த 30 வயது பெண் கதவருகே நின்று கொண்டு சென்றபோது, தவறி வெளியே விழுந்தார்.
அவர் விழுந்ததை மற்ற பயணிகள் கவனிக்கவில்லை. தண்டவாளத்தின் அருகே படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
இந் நிலையில் அந்த வழியே சென்ற திருச்சி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்ட், தண்டவாளம் அருகே பெண் கிடப்பதைக் கண்டு உடனே டிரைவருக்கு தகவல் தந்து ரயிலை நிறுத்தினார்.
அந்தப் பெண்ணை பயணிகளும் கார்டும் மீட்டு, ரயிலில் ஏற்றிக் கொண்டு மீண்டும் திருச்சி ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.












Click it and Unblock the Notifications