கூட்டணியை உடைத்து விடாதீர்கள்-ராமதாசுக்கு திருமா கோரிக்கை

அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிக வலிமையோடு தொடர்ந்து இயங்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும்.
மக்கள் விரோத சக்திகளை விரட்டி அடிப்பதற்கு திமுக கூட்டணி வலுவிழக்கால் இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். கூட்டணியில் திமுக-பாமக இடையே அண்மை காலமாக எழுந்துள்ள கசப்பான முரண்பாடுகள் சரி செய்யப்பட்டு ஒரு நல்லிணக்க உறவு தொடர வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி விரும்புகிறது.
கடுமையான விமர்சனங்கள் என்பதை எல்லாம் கடந்து, மக்கள் நலன் கருதி, மொழி-இனம் கருதி திமுக கூட்டணி ஒற்றுமையோடு இருக்க வேண்டியது இன்றியமையாதாகும்.
எனவே பாமக இன்று செயற்குழுவில் நல்லிணக்கமான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழமையோடு கோரிக்கை விடுக்கிறது.
திரைப்பட மாயைக் காட்டி மக்களை ஏமாற்ற துடிப்பவர்களிடம் இருந்தும், பாசிச சக்திகளிடம் இருந்தும், மத வெறிக் கும்பலிடம் இருந்தும் தமிழ் தேசத்தை பாதுகாக்க திமுக கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்.
இதை கவனத்தில் கொண்டு திமுக-பாமக ஆகிய இரு கட்சிகளும் தோழமையை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி வேண்டுகோள் வைக்கிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications