குடிகார தந்தை-மாணவி சுடுகாட்டில் தஞ்சம்
புளியங்குடி: குடித்து விட்டு அடித்துத் துன்புறுத்தும் தந்தையின் கொடுைக்குப் பயந்து சுடுகாட்டில் தங்கிய மாணவியை போலீஸார் மீட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகேயுள்ள வடநத்தம்பட்டி அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு பால்துரை என்ற மகனும், பரிமளா, பானுபிரியா என்ற மகளும் உள்ளனர். பரிமளா வீரசிகாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டை விட்டு மாயமானார்.
உறவினர்கள் வீடுகளில் தேடிய மாடசாமி பின்னர் சேர்ந்தமரம் போலீசில் கடந்த 13ம் தேதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் கலைமணி மற்றும் போலீசார் மாணவி பரிமாளாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் சேர்ந்தமரம் அருகேயுள்ள பெரியசாமிபுரம் சுடுகாட்டு பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தினசரி வந்து தங்குவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது சுடுகாட்டில் தங்கி செல்வது மாயமான மாணவி பரிமளா என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மாணவி பரிமளா போலீஸ் நிலையத்தில் கூறியதாவது,
நான் வீரசிகாமணியில் 10ம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை என்னை கட்டிட வேலைக்கு அனுப்புவதுடன் குடித்துவிட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்தார். இதனால் நான் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
அடிக்கடி இது போன்ற சம்பவம் நடப்பதால் மிகுந்த மனவேதனை அடைந்த நான் யாரிடமும் சொல்லாமல் மதுரைக்கு சென்று விட்டேன். பின் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன்.
இந்நிலையில் மீண்டும் ஊருக்கு செல்ல விரும்பி சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தேன். ஆனால் மீண்டும் தன்னை துன்புறுத்துவார் என நினைத்து பெரியசாமிபுரம் சுடுகாட்டில் தங்கிக் கொண்டு கையிலிருந்த பணம் மூலம் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு வந்தேன். இந்நிலையில் போலீசார் என்னை மீட்டு வந்தனர்.
எனது பெற்றோர் படிக்க வைத்தால் மட்டுமே அவர்களுடன் செல்வேன். இல்லையென்றால் அவர்களுடன் செல்லமாட்டேன் என்றார்.
இதையடுத்து மாடசாமியின் தங்கை ராமசாமியாபுரத்தை சேர்ந்த பட்டத்துரைச்சி, பரிமாளவை நான் படிக்க வைக்கிறேன் என்று கூறவே பெற்றோர் சம்மதத்துடன் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications