எம்பிபிஎஸ், பிடிஎஸ்- தமிழகத்தில்16000 பேர் விண்ணப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர 16,000 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரி உள்ளன. மேலும் இந்த ஆண்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி புதிதாக தொடங்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,483 உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 251 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்பங்களை சமர்பிக்க நேற்று கடைசி நாள்.

இந் நிலையில் 16,000 பேர் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு 14,500 பேர் விணணப்பித்திருந்தனர்.

இந்த 16,000 பேரில் பெரும்பாலானவர்கள் பொறியியல் படிப்புக்கும் விண்ணப்பித்திருப்பர் என்று தெரிகிறது. மருத்துவம் கிடைக்காவிட்டால் இவர்கள் பொறியியல் கல்வியில் சேருவர்.

கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்சில் இடம் கிடைத்தும் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அதை வேண்டாம் என்று கூறிவிட்டு பொறியியல் கல்வியில் சேர்ந்தது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+