மத்திய அரசு-இடதுசாரிகள் மோதல் தீவிரம்: இடைத் தேர்தலுக்கு வாய்ப்பு

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கூடாது என்று இடதுசாரிக் கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. அதேசமயம், இடதுசாரிகளின் ஆதரவைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இக்கூட்டத்தில் எப்படியாவது இடதுசாரிகளின் ஆதரவைப் பெற்று விட மத்திய அரசு மும்முரமாக இருந்தது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் தலைவர்கள் சீதாரம் எச்சூரியை சோனியா காந்தி சந்தித்துப் பேசினார். பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்ைத சந்தித்துப் பேசினார்.
நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத்தை இரு முறை சந்தித்துப் பேசினார்.ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து நேற்று நடைபெறுவதாக இருந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு விட்டது. ஜூன் 25ம் தேதி மீண்டும் கூடிப் பேச தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதவி விலக மன்மோகன் விருப்பம்:
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது அணுசக்தி ஒப்பந்தத்ைத எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், அதன் அவசியத்தையும் அவர்எடுத்துரைத்துள்ளார்.
இடதுசாரிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இந்த ஒப்பந்தத்ைத நிறைவேற்றிட வேண்டும். அப்படி இதை நிறைவேற்ற மத்திய அரசு தயங்கினால் எனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்றும் பிரதமர் கூறியதாக தெரிகிறது.
ஆனால் பிரதமரின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த சோனியா காந்தி, அணு சக்தி ஒப்பந்தத்ைத நிறைவேற்றுவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இடது சாரித் தலைவர்கள் தனியாக கூடி அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஆலோசித்தனர். இக்கூட்டத்தில், அணு சக்தி ஒப்பந்தத்ைத நிரந்தரமாக மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது என்ற தங்களது நிலையில் எந்தமாற்றமும் இல்ைல என்ற முடிவை எடுத்துள்ளனர்.
மத்திய அரசும் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற உறுதியாகஉள்ளது. இடதுசாரிகளும் பிடிவாதமாக உள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே பேசாமல் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு இடைத் தேர்தலுக்கு போய் விடலாமா என்ற யோசனைக்கு காங்கிரஸ் கட்சி வந்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துள்ளதும் இடைத் தேர்தலுக்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக விரைவில் பரபரப்பான நிகழ்வுகள் டெல்லியில் இடம் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
-
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வந்தால்.. செல்போன் டவர் கூட எடுக்காது? உண்மை என்ன? அதிர்ச்சி பின்னணி -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
கைவிரித்த வெளியுறவுத்துறை.. இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி கொடுத்ததா? - பெரிய ட்விஸ்ட் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்! -
ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்! ட்ரம்புக்கு வந்த அவசர போன்! மிடில் ஈஸ்ட் ‘திக் திக்’ -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
மொத்த மானமும் கப்பல் ஏறிடுச்சு.. எப்ஸ்டீனுடன் டைட்டானிக் போஸ் கொடுத்த டிரம்ப்! மர்ம நபர்கள் சம்பவம்! -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி!












Click it and Unblock the Notifications