கும்மிடிப்பூண்டியில் மேலும் 40 டன் ராக்கெட் குண்டுகள் சிக்கியது
சென்னை: சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் மேலும் ஏராளமான ராக்கெட் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று நடந்த சோதனையில் 40 டன் ராக்கெட் குண்டுகள் சிக்கின.
கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழில் வளாகம் அருகே, கடந்த 7ம் தேதி இலங்கை அகதிகள் முகாமையொட்டியுள்ள பாழடைந்த கிணற்றில் மூட்டை மூட்டையாக ராக்கெட் குண்டுகள், கண்ணிவெடிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து தீவிர சோதனையும், கண்காணிப்பும் நடந்து வருகிறது. இங்கு பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள், அமெரிக்காவிலிருந்து ஸ்கிராப் ஆக வந்தவையாகும். அனைத்தும் ஈராக் உள்ளிட்ட போர்களில் பயன்படுத்தப்பட்டவை.
இந்த நிலையில் சிப்காட் வளாகத்தில் 12க்கும் மேற்பட்ட தனிப்படை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். ஜேசிபி இயந்திரம் மூலம் பூமியைத் தோண்டிப் பார்த்தனர். அப்போது 40 டன் ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்கள் சிக்கின.
இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் கூறுகையில், சிப்காட் வளாகத்தில் உள்ள 17 தொழிற்சாலைகளின் அதிபர்களும் எங்களுக்கு முழுஒத்துழைப்பு அளித்தனர். அதன் அடிப்படையில் பூமியைத் தோண்டிப் பார்த்தோம். அப்போது 40 டன் ராணுவத் தளவாடங்கள் சிக்கின.
அனைத்தும் பயன்படுத்தப்பட்ட, ஸ்கிராப் ஆகும். இவற்றில் எதுவுமே வெடிக்கும் தன்மையில் இல்லை.அனைத்துமே பழைய ராக்கெட் குண்டுகள், துப்பாக்கி குண்டுகள் ஆகும்.
இவற்றை ராணுவத்திடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளோம். இவற்றில் 1930ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களும் அடக்கம்.
இதுதொடர்பாக யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட மாட்டாது என்றார்.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications