பண வீக்கம் பயங்கரம்: 11.05% ஆக உயர்வு!
டெல்லி: பண வீக்க விகிதம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவாக 11.05 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டின் பண வீக்க விகிதம் சமீபகாலமாக கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. உயர்ந்து வரும் விலைவாசி, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணம்.
கடந்த வாரம் பண வீக்க விகிதம் 8.75 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் ஜூன் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது 11.05 சதவீதாக எகிறியுள்ளது.
இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிலான உயர்வாகும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவே பண வீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே 10ம் தேதி பண வீக்கம் 7.82 சதவீதமாக இருந்தது. 17ம் தேதி 8.1 சதவீதமாக உயர்ந்தது. 24ம் தேதி 8.24 சதவீதமாகவும், 31ம் தேதி 8.75 சதவீதமாகவும் உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் அப்போதே சொன்னேன்- சிதம்பரம்:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோல்-சீடல் விலை உயர்வு குறித்து முடிவெடுக்க கேபினட் கூடியபோதே, இந்த விலையை உயர்த்தினால் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தாண்டும் என எச்சரித்தேன். அது தான் இப்போது நடந்துள்ளது.
இப்போது பணவீக்கம் உயர்ந்ததற்கு 94 சதவீதம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தான் காரணம்.
இதைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்றார் சிதம்பரம்.
அதற்காக பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்கும் என யாரும் நினைத்துவிட வேண்டாம். சந்தையில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் மத்திய அரசு இறங்கும்.
முதல்கட்டமாக வங்கிகளின் சி.ஆர்.ஆர். (cash reserve ratio) விகிதம் உயர்த்தப்படலாம். அப்படி நடந்தால் வங்கிகள் வசமுள்ள நிதியில் ஒரு பகுதி ரிசர்வ் வங்கியில் போய் முடங்கும்.
இதனால் வங்கிகள் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன் என மக்களுக்கு கடன் தருவதைக் குறைக்கும். அப்படி நடந்தால் சந்தையில் பணப் புழக்கம் குறையும், அதன் தொடர்ச்சியாக பண வீக்கம் குறையும் என்பது பொருளாதார விதி.
நடக்குமோ?!
-
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications