Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சார்பதிவாளரை மிரட்டிப் பணம் பறித்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி அருகே சார் பதிவாளரை மிரட்டி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசியை அடுத்த கேசவபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இடைகால் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராகப் பணியாற்றி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி ஒய்வு பெற்றார்.

கடையநல்லூர் மாவடிக்காலை சேர்ந்த சசிதரன் என்ற சக்கையன் மற்றும் இடைகாலை சேர்ந்த டிரைவிங் ஸ்கூல் உரிமையாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான செல்லத்துரை ஆகிய இருவரும் இடைகால் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த 5.3.2008 அன்று சென்றனர்.

பாலசுப்பிரமணியனை சந்தித்து தாங்கள் மனித உரிமை கழகத்திலிருந்து வருவதாகக் கூறினர். உங்கள் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. பல இடங்களில் நீங்கள் சொத்து வாங்கி இருக்கிறீர்கள். இதுகுறித்து எங்களது தலைமையில் விசாரணை நடத்த கூறியுள்ளனர்.

எங்களுக்கு 3 லட்ச ரூபாய் கொடுத்தால் இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடுகிறோம். தர மறுத்தால் உங்களை ஒய்வுபெற முடியாமல் செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன பாலசுப்பிரமணியன் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி 26-3-2008 அன்று 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

மீதிப் பணத்தை பின்னர் தருவதாக கூறினார். இந்நிலையில் கடந்த 31-3-2008 அன்று அவர் ஒய்வு பெற்றார். இதன்பிறகும் சசிதரன், துரை இருவரும் அவரிடம் சென்று மீதிப் பணத்தைத் தருமாறு கேட்டு மிரட்டினர்.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி சசிதரன், செல்லதுரையைக் கைது செய்தனர். சார்பதிவாளரை மனித உரிமை அமைப்பின் பெயரைச் சொல்லி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+