'டுட்டேரியல் மாணவன்' வாத்தியாருக்கு மார்க் போடுவதா?-செல்வேந்திரன்!
திருவையாறு: டுட்டோரியல் மாணவன், வாத்தியாருக்கு மார்க் போடுவதா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு, தமிழக அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியான செல்வேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா திருவையாறு திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தேரடி திடலில் பொது கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சிக்கு மார்க் போட விரும்பவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
யாருக்கு யார் மார்க் போடுவது. டுட்டேரியல் மாணவன் வாத்தியாருக்கு மார்க் போட முடியுமா.
கூட்டணியில் இருந்து கொண்டு காடு வெட்டி குரு மத்திய அமைச்சர் ராஜா பற்றியும், தமிழக முதல்வர் பற்றியும் தரக்குறைவாக பேசுகிறார். இதை ராமதாஸ் வேடிக்கை பார்க்கிறார்.
தொழில் நகரம் துவங்க முட்டு கட்டை, விமான நிலையம் துவங்க முட்டுக் கட்டை, என எதற்கு எடுத்தாலும் முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இப்போது முட்டுக்கட்டைக்கே முட்டுக்கட்டை ஏற்பட்டுவிட்டது.
திமுகவும், தலைவர் கருணாநிதியிம் சந்திக்காத போராட்டங்கள் இல்லை. எனவே போராட்டம் என்ற பெயரில் விடுக்கும் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சப் போவதில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications