தண்டவாளத்தில் விரிசல்-தப்பியது நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
மதுரை: ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தக்க சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று மாலை 6 மணிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இன்று காலை 8 மணியளவில் மதுரை சமயநல்லூர் - கூடல் நகர் இடையே ரயில் போய்க் கொண்டிருந்தது.
அப்போது ரயில் வித்தியாசமாக போனது. இதையடுத்து தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்து விட்டார் ரயில் டிரைவர். இதையடுத்து உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
பயணிகள் பீதியடைந்து ரயிலை விட்டு இறங்கினர். அப்போதுதான் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டது. பின்னர் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
என்ஜின் டிரைவர் தண்டவாள விரிசலை தக்க சமயத்தில் பார்த்ததால், பெரும் விபத்திலிருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியுள்ளது.