திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு ஆளுநர் பாராட்டு
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: கொடி நாள் நிதி வசூலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிஞ்சி 45 சதவிகிதம் கூடுதலாக வசூல் செய்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்க்கு ஆளுநர் பர்னாலா பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 - ம் ஆண்டு கொடி நாள் நிதி வசூல் இலக்காக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.22.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிஞ்சி 45 சதவிகிதம் கூடுதலாக வசூல் செய்யப்பட்டது.
இதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். பாராட்டு சான்றிதழை மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம் கலெக்டர் ராஜேந்திரகுமாரிடம் வழங்கினார்.
ஆளுநரின் பாராட்டை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications