குற்றாலத்தில் சாரல் நின்றது- சுற்றுலாப் பயணிகள் கேரளா படையெடுப்பு
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலத்தில் நேற்று காலையில் சாரல் இல்லை. பகலில் வெயில் சுட்டெரித்ததால் சுற்றுலா பயணிகள் பெரிதும் தவித்தனர். பெரும்பாலானோர் கேரளா நோக்கிப் படையெடுத்தனர்.
மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் லேசாக தண்ணீர் விழுந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அருவியில் குளித்தனர். ஐந்தருவியிலும் குறைவான தண்ணீரே விழுந்த்து. இங்கும் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர் பயணிகள்.
செண்பகா தேவி அருவியில் குளிக்க எக்கச்சக்க கூட்டம் அலைமோதியது. மாலையில் காற்று பலமாக வீசியதால் வெயிலின் தாக்கம் குறைந்தது. இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை லேசான சாரல் இருந்தது. குற்றாலத்தில் சாரல் குறைந்ததால் ஏமாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகள் கேரள மாநிலம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications