மெக்கெய்னை விட 15 பாயிண்ட் முன்னேறினார் ஓபாமா
நியூயார்க்: அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜான்மெக்கெய்னை விட 15 சதவீத புள்ளிகள் அதிகம் பெற்று ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பாரக் ஓபாமா வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளார்.
ஹில்லாரி கிளிண்டன் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிய பின்னர் நடத்தப்பட்ட முதலாவது கருத்துக்கணிப்பு இது. நியூஸ்வீக் இதழ் இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில், ஓபாமாவின் செல்வாக்கு உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே ஓபாமாவுக்கு அபாரான செல்வாக்கு உள்ளது.
ஓபாமாவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ள அதேசமயம், மெக்கெய்னின் செல்வாக்கு கணிசமாக குறைந்து விட்டது.
கடந்த மே மாதம், ஹில்லாரியும், ஓபாமாவும் கடும் போட்டியில் இருந்தபோது எடுக்கப்பட்ட நியூஸ்வீக் கருத்துக்கணிப்பில், இருந்ததை விட தற்போது ஓபாமாவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஓபாமாவால் நல்ல மாற்றத்தைக் கொடுக்க முடியும் என்று 51 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 18 வயது முதல் 39 வயதுக்குகள் இருப்போரின் ஆதரவு ஓபாமாவுக்கு 66 சதவீதமாக உள்ளது.
அதேசமயம், முதியோரின் வாக்குகளை இருவரும் ஏறக்குறைய சம அளவில் பகிர்ந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications