வாணியம்பாடி அருகே கோர விபத்து - 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காட்பாடி அருகே உள்ள லத்தேரியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் தனது நண்பர்களுடன் நேற்றுமாலை 3மணியளவில் பெங்களூருக்கு காரில் போய்க் கொண்டிருந்தார்.

வாணியம்பாடி- பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தில் கார் போய்க் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி நடுச்சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை போலீஸார் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் போலீஸார் கவிழ்ந்து கிடந்த காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காரை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸாருக்கு பொதுமக்கள் சிலர் உதவினர். மேலும் விபத்து குறித்து அறிந்த ஜெயப்பிரகாஷின் உறவினர்களும் அங்கு வந்தனர்.

அந்த சமயத்தில், ராணிப்பேட்டையில் இருந்து வந்த ஒரு கார் படு வேகமாக கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்தனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துக்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+