கருணாநிதி வீட்டுக்கு கெரசினுடன் வந்த நபர் கைது
சென்னை: முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு மண்ணெண்ணை கேனுடன் வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு நேற்று இரவு ஒரு வாலிபர் வந்தார். அவரது கையில், மண்ணெண்ணை கேன் இருந்தது. இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரைப் பிடித்தனர்.
அவரை ராயப்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில், அவரது பெயர் நசீம் பாபு என்றும், மதுரை கீழச்சந்தைப் பேட்டையைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது. அந்த வாலிபர் மது அருந்தியிருந்ததும் தெரிய வந்தது.
முதல்வரிடம் புகார் மனு கொடுக்க வந்ததாகவும் அவர் கூறினார். அவரைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் வீடுகளுக்கு இதுபோல மர்ம நபர்கள் வருவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications