3வது அணிக்கு ஜெ. தலைமை-தேசிய லீக் அழைப்பு
நாகை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்க முன் வர வேண்டும் என்று தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை மாவட்ட தேசிய லீக் கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமது கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பெண்களுக்கான 33 இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 10 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தான் முஸ்லீம்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகின்றது.
அணு ஆயத ஒப்பந்தம் செய்வதில் முட்டுக்கடை போடும் இடதுசாரிகள் விலைவாசி உயர்வு விஷயத்தில் ஆதரவு வாபஸ் வாங்க தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.
இந்திய அளவில் மூன்றாவது கூட்டணி உருவாக வேண்டும். அதற்கு அதிமுக பொது பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை ஏற்க முன் வர வேண்டும். இதற்கு பாமக பேன்ற கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்றார் பஷீர் அகமது.












Click it and Unblock the Notifications