இந்தியாவில் புகைக்கு பலி 8 லட்சம் பேர்!
டெல்லி: சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் புகைப் பழக்கத்தால் ஏற்படும் பல்வேறு நோய்களில் உயிரை விடுவதாக அரசின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அட, விலையை எக்கச்சக்கமாக உயர்த்தினாலாவது 'புகைஞர்'களின் தீவிரம் குறையுமா என்று பார்த்தால், அது வேறு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
சிகரெட்தானே காஸ்ட்லி, நாங்க பீடிக்கு மாறிட்டோமே என்று கும்மியடிக்காத குறையாக பீடி, புகையிலை மற்றும் குட்கா வகைகளுக்குத் தாவி வருகிறார்களாம் 'புகைஞர்கள்'.
இந்தியாவில் மட்டும் 100 மில்லியன் மக்கள் புகைக்கும் பழக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களாம். இவர்களில் 53 சதவிகிதம் பேர் பீடிப் பிரியர்கள். 15 சதவிகிதம் மட்டுமே சிகரெட் பிடிப்பவர்கள். கைனி, குட்கா போன்றவற்றைப் பயன்படுத்துவோர் 32 சதவிகிதத்தினராம்.
சோஷியல் ஸ்மோக்கர்கள் எனப்படும் (எப்போதாவது புகைக்கும் பெண்களையும் சேர்த்து!) பிரிவினர் மட்டுமே 50 மில்லியன் இருப்பதாகக் கூறுகிறது இந்த ஆய்வு.
இந்த ஆய்வு முடிவுகளைப் பரிசீலித்த அரசு, இந்த ஆண்டு மேலும் 40 சதவிகிதம் வரை சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு விலையேற்ற முடிவு செய்துள்ளது.
பீடிப் பிரியர்கள் அதைவிட விலை குறைந்த புகைப் பொருளைக் கண்டுபிடிக்கும் வேலையில் இப்போதே இறங்கினாலும் ஆச்சர்யமில்லை.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications