மத்திய அரசுக்கு ஆதரவா?: ஜூலை 3ம் தேதி 3வது அணி முடிவு
டெல்லி: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில், இடதுசாரிகள், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற்றால், மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஜூலை 3ம் தேதி முடிவு செய்ய 3வது அணி தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் நேற்று முலாயம் சிங்யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவுதருவதா, வேண்டாமா என்பதுகுறித்து ஜூலை 3ம் தேதி விவாதித்து முடிவெடுப்போம்.
அன்று நடைபெறும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் விவாதித்து இந்த முடிவு எடுக்கப்படும்.
இக்கூட்டம் மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலாவின் வீட்டில் நடைபெறும். தற்போது அரசியல் சூழ்நிலை, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
3வது அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்வர் என்றார் முலாயம்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் இடதுசாரி தலைவர்களை 3வது அணி தலைவர்கள் சந்திப்பார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications