பிளஸ்டூ மாணவருக்கு சுஷில் ஹரி பள்ளியில் பாராட்டு விழா

இதுதொடர்பாக நடந்த விழாவில் மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு ராஜேஷ் குமாரை பாராட்டினார்.
நிகழ்ச்சியில்,ராஜேஷ்குமார் பேசுகையில், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் மிகச்சிறந்த இடத்தைப் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்தால் தன்னைப் போல நிச்சயம் முதலிடத்தைப் பெற முடியும். பாடங்களை வகைப்படுத்தி, தனித்தனியாக நேரம் ஒதுக்கிப் படித்தால் நிச்சயம் வெற்றி நமக்குத்தான் என்றார்.
எஸ்.வி.சேகர் பேசுகையில், ராஜேஷ்குமாரின் சாதனை பாராட்டுக்குரியது. பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் இருக்கும் ஒவ்வொரு மாணவரும், ராஜேஷ்குமாரை முன்னுதாரணமாக கொண்டு படிக்க வேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
சுஷில் ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கலந்து கொண்டு மாணவர் ராஜேஷ்குமாரை பாராட்டி, வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார். நினைவுப்ப பரிசுகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், சிறந்த சின்னத்திரை நடிகராக தமிழகஅரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் அபிஷேக்கையும் பாபாவும், எஸ்.வி.சேகரும் பாராட்டினர்.
இத்தகவல்களை சுஷில் ஹரி பள்ளியின் முதல்வர் கணேஷ் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications