அணு ஒப்பந்தம்: இன்று அமைச்சரவையின் அவசரக் கூட்டம்
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அதேசமயம், இதுகுறித்து மேலும் விவாதிக்க கால அவகாசத்ைத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெற்றுள்ளது.
இதையடுத்து இன்று அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ளார்.. காலை 11 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கப்படவுளளதாக தெரிகிறது.
மன்மோகன் - சோனியா ஆலோசனை
இதற்கிடையே, நேற்று நடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் பிரதமர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். இதில் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதில்கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டடத்தில் நடந்த விவாதம் குறித்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கினார்.
ஒப்பந்தம் நிறைவேறும் - மொய்லி:
இந்த நிலையில் முன்னாள் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி அளித்த ஒரு பேட்டியில், அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் உறுதியாக உள்ளன. இதில் எந்த மாற்றமும் இல்லை.
அதேசமயம், இடதுசாரிகளின் நிலையில்மாற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிப்போம். அணு சக்தி ஒப்பந்தத்ைத நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதில் எந்த மாற்றமும் இல்ைல என்றார்.
பிரதமருடன் அலுவாலியா சந்திப்பு:
இதேபோல, மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ். அலுவாலியா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை 2 முறை சந்தித்துப் பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சோனியா காந்தியையும் அவர் சந்தித்துப் பேசினார்.
இது அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சாக இருக்காது, விலைவாசி உயர்வு குறித்த ஆலோசனையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications