மன்னாரில் கடும் சண்டை-37 புலிகள், 4 வீரர்கள் பலி
கொழும்பு: இலங்கையின் வடக்கில், மன்னார் பகுதியில் நடந்த கடும் சண்டையில் 37 விடுதலைப் புலிகளும், நான்கு ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிராந்தியத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. முல்லிகந்தல், மரட்டிகண்ணாடி, மொரட்டோந்திவன், மின்னாநிறைஞ்சான் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது.
இந்த சண்டையில் 21 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தமோதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.
முகமலை மற்றும் எளத்துமடுவல் ஆகிய பகுதிகளில் நடந்த சண்டையில் ஒரு விடுதலைப் புலியும், 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
வவுனியாவில், இளமரத்தான்குளம் பகுதியில், நடந்த சண்டையில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், பெரியமடு பகுதியில் நடந்த மோதலில் 3 விடுதலைப் புலிகளும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்ததாகவும், பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதே பகுதியில் நடந்த இன்னொரு சண்டையில்,2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
வவுனியாவின் சிரிடிகுளம் பகுதியில் நடந்த மோதலில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். வெளி ஓயாவில் நடந்த சண்டையில் 5 புலிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications