வெளிநாட்டில் வேலை-கேரள மோசடி தம்பதி கைது
சென்னை: வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்த கேரள தம்பதி கைது செய்யப்பட்டனர்.
மடிப்பாக்கத்தில் வசித்து வரும் கேரளத்தைச் சேர்ந்த நாராயணன் (50), மனைவி பீனா (45) இருவரும் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் மூலம் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ. 10 லட்சம் வரை வசூலித்தனர்.
ஆனால், யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு இன்டர்வியூ நடப்பதாகவும், அங்கு வருமாறு கூறியுள்ளனர்.
இதை நம்பி 12 பேரும் அங்கு சென்றனர். ஆனால், அது கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட இன்டர்வியூ எனத் தெரியவந்தது.
இது குறித்து பெருமாள் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடு்தத்து போலீசார் விசாரணை நடத்தியதில், இவர்கள் மோசடி தம்பதி என்பது உறுதியானது.
இதையடுத்து நாராயணனையும், பீனாவையும் கைது போலீசார் செய்தனர்.












Click it and Unblock the Notifications