7 ஆண்டுகள் தலைமறைவு- முக்கிய குற்றவாளி கைது
சென்னை: கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளி துபாயிலிருந்து விமானத்தில் சென்னை வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துவேல் (45). இவர் மீது அந்த மாவட்டத்தில் பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2001ம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்தார்.
ஆனால், தலைமறைவாக இருந்து வந்தார். இவர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடாமல் தடுக்க இவரது புகைப்படம் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனாலும் கடந்த 2005ம் ஆண்டு எப்படியோ துபாய்க்கு தப்பிவிட்டார். இந் நிலையில் நேற்று துபாயிலிருந்து கொழும்பு வழியாக சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கினார்.
அப்போது இவரை அடையாளம் கண்டுகொண்ட குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் இவரைக் கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவரை ராமநாதபுரம் கொண்டு செல்ல அங்கிருந்து தனிப் படையினர் சென்னை விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications