தடைபட்ட அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.
அமர்நாத் யாத்திரை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதன் பின்னர் 3 முறை யாத்திரை தடைபட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வன்முறை காரணமாக அமர்நாத் யாத்திரை பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று ஜம்முவிலிருந்து யாத்திரை தொடங்கியது. இருப்பினும் ராம்பான் பகுதியி்ல் 2 இடங்களில் கல்வீச்சும், நிலச்சரிவும் ஏற்பட்டதால் யாத்திரை பாதிக்கப்பட்டது.
இன்று 4105 பேர் அடங்கிய குழு யாத்திரையை தொடங்கியது. அவர்களில் 1034 பேர் பெண்கள், 193 பேர் சிறார்கள் ஆவர். காலை ஆறே கால் மணிக்கு யாத்திரை தொடங்கியது. 126 வாகனங்களில் இவர்கள் அமர்நாத் குகை நோக்கி சென்றனர்.
கேலாமோர் பகுதியில், பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு்ள்ளதால் யாத்ரீகர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராம்பான் வரை மட்டுமே செல்ல முடிகிறது. அப்பகுதியில் நிலச்சரிவை சரி செய்து வாகனப் போக்குவரத்தை ஏற்படுத்த எல்லை சாலைகள் கழகத்தினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
17ம் தேதி முதல் இதுவரை 27 ஆயிரத்து 62 யாத்ரீகர்கள் யாத்திரை புறப்பட்டுச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications