மரத்தில் கார் மோதி பாளை. வியாபாரிகள் 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: முக்கூடல் அருகே நேற்று இரவு மரத்தில் கார் மோதியதில் அதில் பயணம் செய்த 6 வியாபாரிகள் பலியாகினர். அனைவரும் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர்கள்.

பாளை. சமாதானபுரம், மனகாவலம் பிள்ளைநகர் பகுதியைச் சேர்ந்த இரும்பு வியாபாரிகள் 9 பேர் முக்கூடல் அருகேயுள்ள வடக்கு பாப்பான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பேரல்கள் ஏலம் எடுக்க ஒரு காரில் சென்றனர்.

அங்கு ஏலம் எடுத்து விட்டு சுமார் 30 பேரல்களை ஒரு வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் தாங்கள் சென்ற காரிலேயே நெல்லைக்குத் திரும்பினர். இரவு சுமார் 7 மணியளவில் முக்கூடல் மைலப்பபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த கார் சாலையோர மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் முனியப்பன், சொர்ணமுத்து, கிருஷ்ணன், சமாதானபுரத்தை சேர்ந்த பீர் முகமது மகன் பாசில், தூத்துக்குடி வெற்றிவேல் புரத்தை சேர்ந்த இஸ்மாயில் மகன் சம்சுதீன் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலயே பலியாகினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கடையம் இன்ஸ்பெக்டர் வேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார் டிரைவர் தமீம் அன்சாரி, ஆறுமுகம், பெரோஸ்கான், நாகூர் மைதீன், அப்துல் முத்தலீப் ஆகிய 6 பேரை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+