ஜி-8 மாநாட்டுக்கு மன்மோகன் போனால் ஆதரவு வாபஸ்: இடதுசாரிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் நிச்சயம் நிறைவேறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள இடதுசாரிகள், இது தொடர்பான ஜி.8 மாநாட்டுக்கு பிரதமர் போனால் தரவு வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ளன.

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை மெளனம் சாதித்து வந்த பிரதமர் இன்று வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று இடதுசாரிகள் எச்சரித்துள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரப்பில் கூறுகையில், ஜி 8 மாநாட்டுக்கு பிரதமர் போகக்கூடாது என்பது எங்களது முக்கிய கோரிக்கை. ஒருவேளை அதற்கு மாறாக பிரதமர் முடிவெடுத்தால், அதை அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சாதகமான நடவடிக்கையாகவே நாங்கள் கருத நேரிடும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது குறித்து நாங்கள் பரிசீலிக்க நேரிடும். இப்போதே, எப்போது ஆதரவை திரும்பப் பெறுவது என்ற பரிசீலனையில் நாங்கள்
உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் உறுதியான பேச்சு மற்றும் இடதுசாரிகளின் கருத்ைதப் பார்க்கும் போது, மத்திய அரசுக்கு இடதுசாரிகள் அளித்து வரும் ஆதரவு விரைவிலேயே விலக்கிக் கொள்ளப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+