டீசல் இல்லை: 3,000 பேருந்துகள் நிறுத்தம்!-பயணிகள் கடும் அவதி!!

இவை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு தினசரி இயங்கும் முக்கியப் பேருந்துகளாகும். மேலும் 20 சதவீத தொலைதூர அரசுப் பேருந்துகளும் அறிவிப்பின்றி சம்பந்தப்பட்ட கோட்ட பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
எண்ணெய் சப்ளை குறைவாக இருப்பதாகக் கூறி, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் பெட்ரோல்- டீஸல் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கு வழங்கப்பட்டு வந்த எல்பிஜி வாயுவும் சுத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தவும், எப்படியாவது பெட்ரோல் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளவுமே இப்படி ஒரு தற்காலிக பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு வந்து சேரவேண்டிய எண்ணெய்க் கப்பல் வராத்தால் பெடரோல் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாக சில அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இந் நிலையில் டீஸல் இல்லாத காரணத்தால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் 3000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், பல ஆம்னி பேருந்துகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இனி டீஸல் கிடைத்தால்தான் தொடர்ந்து பேருந்துகளை இயக்க முடியும் என பேருந்துகளின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். நிலைமை சரியாகும் வரை பயணிகள் டிக்கெட் ரிசர்வேஷனையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கோயம்பேட்டில் தனியார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து நிற்கின்றனர்.
அரசுப் பேருந்துகளும் கணிசமான அளவுக்கு சர்வீஸ்களைக் குறைத்துள்ளன. ஆனால் இதுகுறித்து வெளிப்படையான அளிவிப்பு ஏதும் இல்லை. ஆனால் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் 20 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு சுமை தூக்குவோர் சங்கம் கூறியுள்ளது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications