50 ரூபாய் தர மறுத்த சிறுவனை ரயிலிலிருந்து தள்ளிய டிடிஆர்
டெல்லி: ரயில் பெட்டியில் கிடந்த 50 ரூபாய் தாள் யாருக்கு சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில், 13 வயதுசிறுவனை, ஓடும் ரயிலிலிருந்து பிடித்துக் கீழே தள்ளினார் கொடுமைக்கார டிக்கெட் பரிசோதகர். இதில் அந்த சிறுவனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டு விட்டது.
கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. ரூர்கேலா வந்த அந்த ரயிலில் சங்கர் சிங் என்கிற 13 வயது சிறுவன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான். அப்போது ரயில் பெட்டியில் 50 ரூபாய் தாள் கிடப்பதைப் பார்த்தான்.
அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அந்த பணத்தை தன்னிடம் தருமாறு கூறியுள்ளார். ஆனால் அதைத் தர மறுத்துள்ளான் சங்கர்சிங். இதனால் கோபமடைந்த டிக்கெட் பரிசோதகர் ஈவு இரக்கமே இல்லாமல், ஓடும் ரயிலிலிருந்து சிறுவனைப் பிடித்து தள்ளி விட்டார்.
இதில் சிறுவன் படுகாயமடைந்தான். உடனடியாக ரூர்கேலாவில் உள்ள மருத்துவமனைக்கு அவனை கொண்டு சென்றனர். அங்கு அவனது ஒரு காலை வெட்டி எடுத்துள்ளனர் டாக்டர்கள். தொடர்ந்து அவன் சிகிச்சை
பெற்று வருகிறான்.
இந்த சம்பவம் குறித்து சங்கர் சிங்குடன் இருந்த அவனது நண்பர் ராஜேஷ் சிங் கூறுகையில், அந்த டிக்கெட் பரிசோதகர் பெரிய மீசையுடன் இருந்தார். சங்கரை அவர் சரமாரியாகஅடித்து கீழே தள்ளி விட்டார். அவரை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்றான்.
இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட பரிசோதகர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரை உடனடியாக கைது செய்யாவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாக உள்ளூர் மக்கள் எச்சரித்துள்ளனர்.
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு?












Click it and Unblock the Notifications