இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்: ஏ.பி.பரதன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹிரேன் முகர்ஜியின் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏ.பி.பரதன் உருக்கமாக பேசினார். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும் என அப்போது அவர் விருப்பம் தெரிவித்தார்.
பரதன் பேசுகையில், ஹிரேன் முகர்ஜி மறைந்தபோது இரு கட்சிகளும் இணைய வேண்டும் என ஆசைப்பட்டார். அதுதான் அவரது கடைசி ஆசையாக, நிறைவேறாத ஆசையாக இருந்தது. அது கனிய வேண்டிய நேரம் வந்துள்ளது. அதற்காக இரு கட்சிகளும் பாடுபட வேண்டும்.
ஹிரேன் ஆசைப்பட்டது நடக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் மறைய வேண்டும்.
இந்த மேடையைப் பயன்படுத்தி நான் எனது கருத்துக்களை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை. இருப்பினும் ஹிரேன் விரும்பியதைத்தான் இங்கு மீண்டும் கூறியுள்ளேன் என்றார் பரதன்.
பரதனின் பேச்சை பிரகாஷ் காரத்தும், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யாவும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
சிபிஐ பிரிந்த கதை ...
1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. அதிலிருந்து பிரிந்தவர்கள் உருவாக்கிய கட்சிதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).
64 தேர்தலில் சிபிஐயின் சில முடிவுகளால் அதிருப்தி அடைந்தவர்கள் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தனர். அதன் பிறகு இரு கட்சியினரும் விரோத மனப்பான்மையுடன்தான் செயல்பட்டு வந்தனர்.
ஆனால் போகப் போக குரோத மனப்பான்மை மாறி இரு கட்சிகளும் இணக்கத்துடன் செயல்பட ஆரம்பித்தன. இதன் விளைவாக இடதுசாரி கூட்டணி, 1977ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது.
அதன் பின்னர் இரு கட்சிகளின் கூட்டு செயல்பாடுகள் மேலும் வலுவடைந்தது. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகவும் இடதுசாரி கூட்டணி திகழ ஆரம்பித்தது.
இந்த நிலையில்தான் இடதுசாரிகள் இணைய வேண்டும் என பரதன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications