ஆதரவு வாபஸ் தொடர்பாக வெற்றுக் கூச்சல் போடும் சிபிஎம்: பாஜக
கொல்கத்தா: ஆதரவை வாபஸ் பெறப் போகிறோம், போகிறோம் என்று வெற்றுக் கூச்சல் போட்டு வருகின்றன இடதுசாரிகள் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது இடதுசாரி முன்னணி. ஆதரவை வாபஸ் பெறுவோம் என சிபிஎம் மிரட்டி வருகிறது. ஆனால் அவர்கள் சொன்னதை செய்யாமல் வெறுமனே வெற்றுக்கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒன்று அவர்கள் ஆதரவை வாபஸ் பெற வேண்டும். அல்லது வெற்றுக் கூச்சல் போடுவதை நிறுத்த வேண்டும்.
அவர்கள் எழுதிய கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. அதற்காக காத்திருப்பதாக காரத் கூறுகிறார். அப்படி இருக்கையில், ஜி-8 மாநாட்டுக்குப் போனால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று ஏன் கூறிக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
கடந்த ஒரு வருடமாகவே அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடகமாடி வருகிறது சிபிஎம். ஆதரவை வாபஸ் வாங்கப் போவதாக கூறிக் கொண்டே அதைச் செய்யாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
தற்போதுள்ள நிலையில் அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஏற்காது. நமது நாட்டின் சுய மரியாதையை எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றார் ராஜ்நாத் சிங்.












Click it and Unblock the Notifications