குலாம் நபி ஆசாத் திடீர் ராஜினாமா - நம்பிக்கை வாக்கு கோரவில்லை
ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயகக் கட்சி, அரசுக்கு அளித்து வந்தஆதரவைத் திரும்பப் பெற்றுவிட்ட நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பெரும்பான்மைக்குப் போதுமான பலம் கிடைக்காததால் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அவர் வாபஸ் பெற்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் முப்தி முகம்மது சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
அமர்நாத் கோவில் போர்டுக்கு நிலம் கொடுத்தது தொடர்பாக வெடித்த போராட்டத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக மக்கள் ஜனநாயகக்கட்சி அறிவித்தது. இதனால் சிறுபான்மை அரசாக மாறியது ஆசாத் அரசு.
இதையடுத்து 7ம்தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் என்.என். வோரா ஆசாத்துக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று சிறப்பு சட்டசபைக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 45 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியாததால், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை திரும்பப் பெற தீர்மானித்தார் ஆசாத். மேலும் தனது முதல்வர் பதவியையும் அவர் ராஜினாமா செய்ய முடிவெடுத்து ஆளுநர் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications