மதவாத சக்திகள் வந்து விடக் கூடாது என்பற்காகவே ஆதரவு: முலாயம்
லக்னோ: மதவாத சக்திகள் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது என்பதற்காகவே ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்க சமாஜ்வாடி கட்சி முன்வந்தது என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார்.
லக்னோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முலாயம் சிங் யாதவ் பேசுகையில், உ.பியில் காங்கிரஸ் -சமாஜ்வாடி கூட்டணி அமைவது இப்போது முக்கியப் பிரச்சினை அல்ல.
நாட்டை மதவாத அரசியல்வாதிகளிடமிருந்து காப்பதும், அரசியல் நிலையற்ற தன்மையை நீக்குவதுமே முக்கியமானதாகும். அந்த அடிப்படையில்தான் சமாஜ்வாடி இந்த முடிவை எடுத்துள்ளது.
அணு சக்தி ஒப்பந்தம் காரணமாக அரசு கவிழ்வதை நான் அனுமதிக்க முடியாது. தேச நலனைக் கருத்திக் கொண்டே காங்கிரஸ் அரசுக்கு ஆதரவுளிக்க முனைந்துள்ளோம்.
இந்த ஒப்பந்தம் குறித்து அப்துல் கலாமிடம் கேட்டபோது அவர் சிறந்த ஒப்பந்தம், நாட்டு நலனுக்கு முக்கியமானது என்றே தெரிவித்தார். எனவேதான் இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம்.
எங்களை 3வது அணியிலிருந்து விலக்க செளதாலா யார். எங்களை யாரும் வெளியேற்ற முடியாது. வேண்டுமானால் செளதாலா கூட்டணியை விட்டு போய்க் கொள்ளட்டும் என்றார் முலாயம் சிங் யாதவ்.












Click it and Unblock the Notifications