விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை தினம் - பிரபாகரன் அஞ்சலி

வவுனியாவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் கரும்புலிகள் படையின் முதல் வீரரான காப்டன் மில்லரின் படத்திற்கு பிரபாகரன் மாலை அணிவித்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி உள்ளிட்ட 356 கரும்புலி வீரர்களின் படங்களுக்கு பிரபாரகரனின் மனைவி மதிவதனி பிரபாகரன், விடுதலைப் புலிகள் மற்றும் கரும் புலிகள் அமைப்பின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உள்ளிட்டோர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பல்வேறு கரும்புலிகள் பிரிவு பாடல் சிடிக்களை பிரபாகரன் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து பாடல் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்டவையும் நடைபெற்றன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கரும்புலிகள் நாள் அனுசரிக்கப்பட்டது.
கரும்புலிகள் படை 1987ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி உருவாக்கப்பட்டது. அது முதல் இதுவரை மொத்தம் 356 கரும்புலி வீரர்கள் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளனர். இவர்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1200, காயமடைந்தோரின் எண்ணிக்கை 3500க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் அருகே உள்ள நெல்லியடியில்தான் முதல் கரும்புலி தாக்குதல் நடந்தது. அங்கிருந்த ராணுவ முகாம் மீது வெடிகுண்டுகள் நிரப்பபப்பட்ட லாரியுடன், கரும்புலிகள் படையைச் சேர்ந்த கேப்டன் மில்லர் என்பவர் தாக்குதல் நடத்தினார். இதில் மில்லர் மற்றும் 39 இலங்கை வீரர்கள் உயிரிழந்தனர்.
கரும்புலிகளின் தாக்குதலில் மிகவும் பரபரப்பானதும், பயங்கரமானதுமாக ராஜீவ் காந்தி படுகொலை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கரும்புலிகள் பிரிவின் தலைவராக உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் செயல்பட்டு வருகிறார். கரும்புலிகளின் கடற்பிரிவு தலைவராக சூசை திகழ்கிறார்.












Click it and Unblock the Notifications