Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கக் காசு மோசடி: பெண் தொழிலதிபர் பத்மா கைது

Subscribe to Oneindia Tamil

Padma
சென்னை: சென்னையைக் கலக்கிய தங்கக் காசு மோசடி வழக்கில் பெண் தொழிலதிபர் பத்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, மோசடி மூலம் வாங்கிக் குவித்த ரூ. 11 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வந்த கோல்ட்குவெஸ்ட் நிறுவனம் தங்கக் காசு மோசடித் திட்டத்தின் மூலம் பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீஸார், அந்த நிறுவனத்தை மூடி சீல் வைத்தனர். நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ. 190 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் ரூ.50 கோடி ரொக்கம், ரூ.90.5 கோடி பங்கு பத்திரங்கள், ரூ.35 கோடி அசையா சொத்துகள், ரூ.15 கோடி மதிப்புள்ள கார் போன்ற அசையும் சொத்துகள் அடக்கம்.

தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதுவரை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் புஷ்பம் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ஏஜென்டாக செயல்பட்டு வந்த பெண் தொழிலதிபர் பத்மாவை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் கார்டன் பகுதியில், மிகப் பெரிய பங்களாவில் வசித்து வருகிறார்.

நேற்று காலை இவரது வீட்டுக்குப் போலீஸார் போனபோது அவர் அங்கு இல்லை. விசாரித்தபோது கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அவரை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் வீட்டில் சோதனை நடந்தது.

இதில், ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஹோண்டா சிட்டி, பி.எம்.டபிள்யூ., பென்ஸ் ஆகிய 3 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பத்மா வசித்த பங்களாவின் மதிப்பு ரூ.4 கோடி என்றும், அதே கீழ்ப்பாக்கம் பகுதியில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி வீடு ஒன்றும், ரூ.40 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி வீடு ஒன்றும் இருப்பதாகவும், அதுதொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் போலீசார் கூறினார்கள்.

கைது செய்யப்பட்ட பத்மா போலீஸாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி ஆகும். 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. எனது கணவர் பெயர் ரவிசங்கர். அவர் பிரிந்து சென்றுவிட்டார். எனது கணவர் போன பிறகு, நான், எனது 2 மகன்களுடன் மிகவும் கஷ்டப்பட்டேன். வாழ்க்கையை நடத்த கடும் போராட்டம் நடத்தினேன்.

எப்படியாவது வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியம் எனது மனதில் கொளுந்துவிட்டு எரிந்தது. பி.காம். பட்டப்படிப்பு படித்துள்ள நான், முதலில் வேலை தேடினேன். வேலை கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்தான் குயிஸ்நெட்' நிறுவனத்தின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.

2001-ம் ஆண்டு அந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து படிப்படியாக ஏஜெண்டு அந்தஸ்துக்கு உயர்ந்தேன். அதில், கோடி, கோடியாக கமிஷன் பணம் கொட்டியது. சட்டப்பூர்வமாக அந்த நிறுவனம் செயல்பட்டது. நான் யாரையும் மோசடி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செய்யவில்லை. என்னால் ஏராளமான பேர் பலன் அடைந்துள்ளனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் பத்மா.

முழுமையான விவரங்களை அவர் இதுவரை சொல்லவில்லை.எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பத்மா நேற்று மாலை சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பத்மாவை வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து பத்மா சென்னை புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+